தேர்தல் தேதியை இன்று அறிவிக்க கூடாது: திமுக மீண்டும் மனு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மறு வரையறை செய்யப்பட்ட பின்னரே தேர்தல் தேதி அறிவிக்கப்பட வேண்டும் என்றும் மற்ற மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்த எந்தவித தடையும் இல்லை என்றும் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது

இதனையடுத்து இன்று புதிய தேர்தல் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் சற்று முன்னர் திமுக தமிழக தேர்தல் ஆணையத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது இந்த மனுவில் கூறியிருப்பதாவது

இட ஒதுக்கீட்டை சட்டவிதிமுறைப்படி செய்த பின்னர் தேர்தலை அறிவிக்க வேண்டும். அதேபோல் பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை சட்டவிதிமுறை படி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு அளித்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த மனுவால் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது

Leave a Reply