shadow

_75099439_022423364பால்டிக் நாடுகளை சேர்ந்த லிதுவேனியா நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபரும் லிதுவேனியாவின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படுபவருமான டாலியா க்ரைபாஸ்கைட்டே அபார வெற்றி பெற்று மீண்டும் அதிபராகியுள்ளார். இந்த நாட்டில் இதுவரை எந்த அதிபரும் இரண்டாவது முறை வெற்றி பெற்றதில்லை. அந்த சாதனையை இவர் செய்துள்ளார்.

லிதுவேனியா தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. டாலியாவின் கட்சி 57.7 சதவிகித வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட சமூக ஜனநாயக கட்சிக்கு 42.2 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

இரண்டாவது முறையாக அதிபராக டாலியா இன்னும் சில நாட்களில் பொறுப்பேற்றுக்கொள்ள இருக்கிறார். வெற்றி பெற்ற டாலியாவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் பதவியேற்க உள்ள நரேந்திரமோடியும் வாழ்த்து செய்தியைனை டாலியாவுக்கு தெரிவித்துள்ளார்.

Leave a Reply