அஞ்சான் படத்தை அடுத்து கார்த்தியின் நடிப்பில் புதிய படத்தை இயக்க லிங்குசாமி முடிவு செய்துள்ளார். இதற்காக கார்த்தியிடம் கால்ஷீட் வாங்கி வைத்துள்ள லிங்குசாமி, சமீபத்தில் விஷாலையும் சந்தித்து கால்ஷீட் கேட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
விஷால் லிங்குசாமி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படும் நிலையில், கார்த்தி மற்றும் விஷால் இருவரும் ஒரே படத்தில் நடிக்கின்றார்களா? அல்லது இருவரையும் வைத்து இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் லிங்குசாமி இயக்கப்போகின்றாரா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.
லிங்குசாமி ஏற்கனவே கார்த்தியை வைத்து ‘பையா’ என்ற வெற்றி படத்தையும், விஷாலை வைத்து ‘சண்டக்கோழி’ என்ற படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஞ்சான் தோல்வியை சரிக்கட்ட லிங்குசாமி ஒரே படத்தில் கார்த்தி, விஷால் ஆகிய இருவரையும் பயன்படுத்துவார் என்றே கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.