சூர்யா, சமந்தா நடித்த அஞ்சான் திரைப்படம் கடந்த வெள்ளியன்று மிகுந்த எதிர்பார்ப்புடன் தமிழகம் முழுவதும் வெளியானது. ஆனால் படம் வெளியான ஒருசில மணி நேரத்திலேயே இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் படத்தை குறித்து நெகட்டிவ் ரிசல்ட் வெளிவந்ததால் அஞ்சான் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி தியேட்டரில் ரசிகர்களின் ரியாக்சன் எப்படி இருக்கின்றது என்பதை நேரில் பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்ற இயக்குனர் லிங்குசாமிக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. தியேட்டரில் சூர்யா சீரியஸாக வசனம் போதெல்லாம் ரசிகர்கள் கலாய்த்தபடி இருந்ததார்கள். மேலும் இடைவேளை நேரத்தில் லிங்குசாமியை நேரில் பார்த்து அவரிடமே சில ரசிகர்கள் படம் ரொம்ப போர் என முகத்திற்கு நேராக சொன்னதாகவும், அதனால் லிங்குசாமி அதிர்ச்சி அடைந்து பாதியிலேயே தியேட்டரை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
லிங்குசாமியின் அஞ்சான் தோல்வியால் பார்த்திபன் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றார். அஞ்சான் படம் பார்க்க வந்த பலர் படத்தின் ரிசல்ட்டை தெரிந்துகொண்டு பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்கு செல்வதாக கூறப்படுகிறது. ஒரு மாஸ் ஸ்டார் படத்திற்கு போட்டியாக படத்தை வெளியிட வேண்டாம் என்று பார்த்திபனை அவரது நண்பர்கள் வட்டாரம் எச்சரித்தபோதும், அவர் தைரியமாக தன்னுடைய படத்தை வெளியிட்டார். அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை என்றே சொல்லவேண்டும். அவருடைய படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் உள்ளதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.