இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திலிருந்து முன்னாள் ஐ.பி.எல் தலைவர் லலித் மோடி நீக்கப்பட்டார். சென்னையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாழ்நாள் தடை காரணமாக இனி எந்த பிசிசிஐ நடவடிக்கைகளிலும் லலித் மோடி பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஐ.பி.எல் தொடரில் ஏற்பட்ட நிதி முறைகேடுகள் காரணமாக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply