shadow

isisஈராக் நாட்டில் தீவிரவாத செயல்களை செய்துவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் ஏற்கனவே இரண்டு அமெரிக்க பத்திரிகையாளர்களின் தலைகளை துண்டித்து கொலை செய்த அதிர்ச்சி நீங்குவதற்குள் தற்போது லெபனான் வீரர் ஒருவரை தலையை மீண்டும் துண்டித்து  படுகொலை செய்து வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.

ஈராக், சிரியாவின் ஆகிய நாடுகளை ஒன்றிணைத்து இஸ்லாமிய நாடு அமைப்பதற்காக போராடி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து ஈராக் மற்றும் சிரியா அரசுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்ர். இந்நிலையில் ஈராக் மற்றும் சிரியாவில் போர் செய்திகளை சேகரிக்க சென்ற அமெரிக்க பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் போலே, மற்றூம் ஸ்டீவன் சாட்லாப் ஆகிய இருவரையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து சென்று அவர்களின்  தலைகளை துண்டித்து படுகொலை செய்தனர். இதனால் அமெரிக்கா உள்பட உலக நாடுகள் கடும் அதிர்ச்சியில் உள்ளது.

இந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் தற்போது லெபனான் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் அப்பஸ் மெட்லஜ் என்பவரின் தலையை துண்டித்து மீண்டும் தங்கள் வெறிச்செயலை தீவிரவாதிகள் வெளிப்படுத்தியுள்ளனர். பிடிபட்ட லெபனான் வீரரை விட்டுவிடுமாறு அவருடைய தாயார் ஷிர்லி ஷாட்லாஃப் டுவிட்டரில் விடுத்த வேண்டுகோளுக்கு செவிசாய்க்காமல் இந்த படுகொலையை அவர்கள் செய்துள்ளனர். இந்த படுகொலை சம்பந்தப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

Leave a Reply