கோழிக்கோட்டில் மனிதநேயம்

கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று விபத்துக்கு உள்ளானது என்பது தெரிந்ததே

இதில் 15 பயணிகள் பலியானதாக மேலும் சில காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன. காயமடைந்த ஒருசில பயணிகளுக்கு உடனடியாக ரத்தம் தேவைப் படுவதாக தகவல்கள் வெளிவந்தன

இந்த தகவலை அடுத்து கோழிக்கோடு பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக இரத்த தானம் செய்ய முன்வந்தனர். கடும் மழையையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவு நேரத்தில் பொதுமக்கள் ரத்த தானம் செய்வதற்காக வரிசையில் நின்றது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

டாஸ்மாக் வரிசையோ மற்ற வரிசையிலோ அவர்கள் நிற்கவில்லை என்றும், மனிதநேயத்தை காப்பதற்காக ரத்ததானம் செய்ய வரிசையில் நிற்கின்றார்கள் என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன

Leave a Reply