shadow
lalithakumari
கே.பாலசந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும்’ என்ற படத்தில் அறிமுகமான நடிகை லலிதகுமாரி அதன் பின்னர் புதுப்புது அர்த்தங்கள், புலன் விசாரணை, சிகரம், போன்ற பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். பின்னர் நடிகர் பிரகாஷ்ராஜுடன் ஏற்பட்ட நட்பு காதலாகி மாறி இருவரும் கடந்த 1994ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

பிரகாஷ்ராஜ்-லலிதகுமாரி தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்த நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர்.

திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகியிருந்த லலிதகுமாரி தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிஎஸ்கே என்னும் ‘சார்லஸ் ஷபி கார்த்திகா’ என்னும் படத்தில் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்துள்ளார்.

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய லலிதாகுமாரி, ‘தனது மூத்த மகள் பிரிட்டனில் பெரிய படிப்பு படித்து வருவதாகவும், அதற்கு காரணமே இந்த படத்தின் இயக்குனர் சத்யாதான் என்றும், அவர் தனது சகோதரனை போல இருந்து தனது மகளுக்கு டியூஷன் சொல்லி கொடுத்ததாகவும் கூறினார்.  இந்நிலையில் அவர் உதவி இயக்குனராக வேண்டும் என்று ஆசைப்பட்டபோது தனது முன்னாள் கணவர் பிரகாஷிடம் அவரை உதவி இயக்குனராக சேர்த்துக்கொள்ளும்படி தான் கேட்டுக்கொண்டதாகவும் கூறினார். தற்போது சத்யா இயக்குனராகி, அவர் இயக்கியுள்ள படத்தில் பணிபுரிந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply