shadow

lakshmi1.மஞ்சள்.
2.குங்குமம்.
3.தங்கம்.
4.வெள்ளி.
5.விளக்கு.
6.தானியங்கள்.
7.பழங்கள்.
8.தண்ணீர்.
9.புஷ்பம்(பூ)
10.பணம்.
11.புத்தகங்கள்.
12.உப்பு.
போன்றவற்றில் லெஷ்மியின் அம்சம் இருக்கிறது.

பொதுவாகவே லெட்சுமி (ஸ்ரீதேவி) அதிகாலை 6 மணிக்குள்ளும்,மாலை 6 மணிக்கு மேல் நம் இல்லத்திற்கு வருவாள் என்பது சாஸ்திரமாகும்.

அதனால்தான் அதிகாலை வாசலில் சாணம் தெளித்து கோலமிட்டு,லெட்சுமி விளக்கேற்றி ஸ்ரீதேவியை வரவேற்க வேண்டும்.

அதேபோல் மாலை 6 மணிக்கு மேல் மேற்கண்ட லெட்சுமி அம்சமுள்ள பொருட்களை தானம் கொடுத்தால், நம் வீட்டுக்கு வரும் லெஷ்மி இந்த வீட்டில் தன்னை அலட்சிய படுத்துகிறார்கள், அதனால் இந்த வீட்டில் நாம் வாசம் செய்ய வேண்டாம் என எண்ணிவிடுவார் என்பதற்க்காகவே, மாலை 6 மணிக்கு மேல் லெஷ்மி கடாட்சமான பொருடகளை தானம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரமாகும்.

Leave a Reply