shadow

‘புலி’ பட தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியா? திடுக்கிடும் தகவல்

puli vijayசமீபத்தில் சிம்பு நடித்த ‘வாலு’ படம் பல பிரச்சனைகளில் சிக்கி ரிலீஸாகாமல் பண நெருக்கடியில் சிக்கி தவித்தபோது, தானாகவே முன்வந்து விஜய் உதவி செய்ததாகவும், அவருடைய தலையீட்டின் காரணமாகவே ‘வாலு’ படம் ரிலீஸ் ஆனதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் பிரபல இணையதளம் ஒன்று விஜய் நடித்துள்ள ‘புலி’ படத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் மற்றும் சின்ன நடிகர்கள் உட்பட பலருக்கு இதுவரை சம்பளம் கொடுக்கப்படாமல் இழுத்தடித்து கொண்டு இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

தயாரிப்பாளரிடம் சம்பளம் கேட்கும் தொழிலாளர்களை தயாரிப்பு தரப்பு மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. திரையுலகினர் உள்பட கஷ்டப்படும் பலருக்கு தனது சொந்த காசில் உதவி செய்து வரும் விஜய், தனது படத்திற்காக வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு இன்னும் சம்பளம் சென்று சேரவில்லை என்ற தகவல் தெரியுமா? அல்லது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றாரா? என்பது பலருக்கு புரியவில்லை.

தீவிர அஜீத் ரசிகராக இருக்கும் சிம்புவை தனது பக்கம் இழுப்பதற்காக விஜய் செய்த உதவி  என பலர் விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்த விஷயத்தில் விஜய் தலையிட்டு தங்களது சம்பளத்தை பெற்று தர உதவி செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply