shadow

10659287_948158388579015_8190337104905065322_n

குழந்தை செல்வமே மிக பெரிய செல்வம் என்ற பதிப்பில் சோதிட ரகசியத்தையும் முன்னோர்கள் வகுத்த பொருத்தம்கள் பற்றியும்
பார்த்து வருகிறோம் ………

பொதுவாக நம் எல்லோர் மனதிலும் நமக்கு மட்டும் ஏன் இது நடக்கிறது ,
ஏன் நமக்கு கிடைக்கவில்லை ,எத்தனை சிரமபட்டு ஒரு வேலையை செய்தலும் அதன் பலன் ஏன் நமக்கு கிடக்க வில்லை என்ற
ஆதங்கம் வரும் .

இதை பற்றி பல முறை நான் சிந்தனை செய்தது உண்டு .
பல கோடி பிறவிகளில் மனித பிறவி நமக்கு கிடைத்தது அற்புதம் .
இப்படி பிறக்கும் நாம் எல்லோரும் ஒன்று போல பிறப்பது இல்லை .

ஒரே நேரத்தில் பிறக்கும் பல உயிர்கள் ஒன்று சிறந்த அறிவாளியாக ஒன்று மிக பெரிய அந்தஸ்து உள்ள குடும்பத்தில்
ஒன்று ஏழையின்
ஒன்று ஊனமாக அல்லது பெற்றோர்கள் இல்லாமல் பிறப்பது
இப்படி பலவாரியாக பிறப்பது .

இந்த கேள்விகளுக்கு பதில் நான் தேடியபொழுது
ஸ்ரீ மந்நாராயண மூர்த்தியால் கருடனுக்கு சொல்லப்பட்ட புராணத்தில் பல ரகசியும்கள்
முன் ஜென்ம வர்ணனை என்று தொகுப்பில் உள்ளதை கண்டு வியந்து விட்டேன் .

சைவ/வைணவ மார்க்கத்தில் மட்டுமே இதற்கு பதில் உள்ளது என்று பார்க்கும் பொழுது ஆன்மாக்கள் உடலை விட்டுவிட்டால் மறு பிறவி கிடையாது என்று மற்ற சமய நூல்கள் சொன்னாலும் ,

ஒன்றும் அறியாத குழந்தை பிறப்பு கொடுக்கப்படும் பொழுது ஏன் குறைகளுடன் பிறக்க வேண்டும் என்ற கேள்விகள் எழும் பொழுது செய்த
செயலுக்கு பிறவி கொடுக்க படுகிறது என்பது மறுக்க முடியவில்லை .

முன் ஜென்மை இருப்பது உண்மையா?என்ற கேள்விகள் எழும் பொழுது

பல ரசியம்களை சொல்ல வேண்டிவரும் .

சிலவற்றை பற்றி மட்டும் அறிந்து கொள்வோம் …

1.மந்திரத்தை தவறாக பயன்படுத்தியவன் மனநிலை பாதித்து பிறக்கிறான் .(மந்திரவாதி )
2.குடும்பத்தை கோல் சொல்லி கலைத்தவன் அனாதையாக பிறக்கிறான் .
3.குரு பத்தினியை தவறாக பார்த்தவன் ஒரு கண் குறையுடன் பிறக்கிறான் .(மாறு கண் )
4.குருவின் மனைவியை கெடுத்தவன் முகத்தில் மரு/பருவோடு பிறக்கிறான்.
5.மனைவியை /சகோதிரியை பிறருக்கு பொருளுக்கு தந்தவன் கால் ஊனமாக பிறக்கிறான் .
6.கணவனுக்கு துரோகம் செய்தவள் விலை மாதுவாக பிறக்கிறாள் (குடும்பத்தில் )
7.பல பெண்களின் கருவை அவர்களுக்கு தெரியாமல் கலைத்தவர்கள் குருடர்களாக .
8.எப்பொழுதும் பொய்களை பேசி வாழ்ந்தவர்கள் ஊமையாக
பிறக்கிறார்கள்.
9.படித்த /குருவிடம் பெற்ற மந்திரத்தை அவமானபடுத்தி பயன்பாடு செய்தவர்கள் செவிடர்களாக பிறக்கிறார்கள்.
10.பெண்களை கொடுமை செய்தவர் பெண்களுடன் அல்லது பெண்களே இல்லது குடும்பத்தில் பிறப்பார்கள் .

இப்படி பல ரகசிய தகவல்கள் உள்ளது ,
இவைகள் நீங்கள் ஒழுக்கமாக வாழவேண்டும் என்றும் பாவித்து கொள்ளலாம்
அல்லது உங்க ஆராய்ச்சிக்கும் எடுத்து கொள்ளலாம் .

நாம் குழந்தை செல்வம் பற்றி பார்க்கும் பொழுது சோதிட கணக்குகளை
ஆராய்தோம் .
நான் சித்தர்களை வழிபாடு செய்த பிறகு சோதிட கணக்குளை பார்த்த பொழுது கணக்குகளோடு காரணமும் தெரிந்தது .

எனக்கு 24 வயது இருக்கும் பொழுது எனது நண்பர் ஒரு பெரியவரிடம் அழைத்து சென்றார் ,அங்கே நிறைய நபர்கள் அமர்ந்து இருந்தார்கள் .

அங்கே பெருமாள் கோவில் பாதி கட்ட பட்ட நிலையில் இருந்தது .
நபர்கள் சிலர் காணிக்கைகளை ஒரு உண்டியலில் சேர்த்த படி இருந்தார்கள் .

நான் நபரிடம் எதற்கு இங்கே வந்தோம் என்றவுடன் அவர் சொன்னார் ,
எனக்கு பல வருடமாக குழந்தை இல்லை அதை பற்றி கேட்க இவரிடம் வந்தேன் ,உனக்கு சோதிட ஞானம் உள்ளதால் உன்னையும் அழைத்து வந்தேன் என்றார் .

அந்த பெரியவரை பார்த்த பொழுது ஒரு சந்நியாசி போல இருந்தார் .
அவருடைய மனைவியும் அவருடன் இருந்தார்கள் .
எங்களுக்கு முன் ஒரு தம்பதியர் அவரிடன் குழந்தை செல்வம் பற்றி கேட்ட பொழுது அவர் சொன்னார்

முதலில் நீங்கள் இருவரும் கருமிதனம் /கஞ்சத்தனம் விட்டு பல நபர்களுக்கு தானம் செய்ய வேண்டும் ,
தான பலனே இல்லை மேலும் 12 வருடம் நீங்கள் இருவரும் இந்த சாபத்தை அனுபவித்தே தீர்க்க வேண்டும் முதலில் தானம் செய்யுங்கள் ,

நேரம் கிடைக்கும் பொழுது ராம் ராம் என்று 1 கோடி முறை சொல்லிய படி எழுதவும் என்றார் .

நண்பர் அவரிடம் இதே கேள்விகளை கேட்டார் ,
அவர் நண்பரை பார்த்து சிரித்து விட்டு
ஆண்மை, ஆண்மை என்று கர்வித்து பெண்களை நீ நோகடித்து விட்டாய்
பெண்களின் சாபம் உனக்கு ஆண்மையில் பதிந்து விட்டது

பெண்களிடம் ஆசிகள் பெற்றால் மட்டுமே உனக்கு விடுவு கிடைக்கும் .
திரிபுர சுந்தரி வால சாபத்தை அழிப்பால் அவளிடம் போய் சரண் அடைத்துவிடு என்றார் .அன்று எனக்கு திருமண ஆகவில்லை எல்லாவற்றையும் கவனித்து விட்டு வந்து விட்டேன் .

இன்று திருமணம் முடிந்து அகத்தியர் ஆசிகளால் அந்த சாபம்கள் புரிந்து
கொள்ள பட்டது .

குழந்தைகளை பெறவும் சாபத்தை கண்டு அறிந்து நிவர்த்தி செய்து கொண்டால் நிச்சியம் அவர்களுக்கு குழந்தை தரப்படும் .அல்லது
இவர்கள் சாபத்தை அறிந்து அவர்களுக்கு ஆசிகள் கொடுக்கும்
குருமார் தந்தால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் .

திருவாரூரில் ஒரு தம்பதியருக்கு குழந்தை இல்லை ,பரிகாரம் செய்ய தெரியாது ,
பெரியவர்கள் யாராவது இந்த கோவிலுக்கு போ என்று சொன்னால் போவர்கள் அவ்வுளவுதான் .

இப்படி இவர்கள் கேள்விப்பட்டு வந்த இடம் தான் திருவாரூர் கோவில் குளத்தின் தென்மேற்கில் உள்ள குரு தக்ஷனமூர்த்தி மடம்

இங்கு இருந்த பெரியவரிடம் குழந்தை வேண்டும் என்று கதறிய பொழுது
அவர் உங்களுக்கு இந்த தியகேசனின் கருணையால் குழந்தை பிறக்கும்

என்று ஆசிகள் கொடுத்து அனுப்பி வைத்தார் .

குழந்தை பிறந்தது ஆண் குழந்தை ,அந்த குழந்தைக்கு தக்ஷன மூர்த்தி என்று பெயர் வைத்தார்கள் .இன்றும் அவர் வாழ்கிறார் நம்மில் உயர் பதவி பெற்று (அரசியல் வேண்டாம் ).

இப்படி குரு ஆசிகள் பல சாபம்களை விளக்கி விடும் .

இந்த பதிவை நிறைய எழுத ஆவல் ,
ஆனால் comments வருவது மனம் வருத்த படுகிறது .
தப்பான விமர்சனம் சோதிடத்தை அவமானம் செய்கிறது .
“அகத்தியரின் ஆணை புரியாதவருக்கும் ,அறியாதவருக்கும் உரைக்காதே” என்பது ….

மேலும் குழந்தை இல்லாதவருக்கு எழுத போய் அவர்கள் நம்பிகை
உடையும் படி உள்ளது ,

விமர்சனம் தவிர்க்க குழந்தை இல்லாதவர்கள் உங்கள் திருமன நாள் தேதி தாலி கட்டிய
நேரம் ,மற்றும் ஆண்களின் நட்சதிரம் எனக்கு தனியாக msg செய்யவுன் பரிகாரம் அனுப்புகிறேன்

Leave a Reply