shadow

ராகுல் காந்தியுடன் குஷ்பு திடீர் சந்திப்பு: தமிழக காங்கிரஸ் தலைவர் ஆகிறாரா?

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்க அதன் தலைவர் ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார். குறிப்பாக காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட ஒருசில மாநிலங்களின் தலைவர்களை மாற்ற அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் அவரை மாற்ற வேண்டும் என்று கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சற்றுமுன் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, ராகுல்காந்தியை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, ‘தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ராகுல் காந்தியுடன் பேசியதாக கூறினார். மேலும் ”எதையும் தாங்கும் இதயம் என கூறியதன் அர்த்தத்தை துணை முதல்வர் விளக்க வேண்டும் என்றும் ராணுவ ஹெலிகாப்டர் விவகாரத்தில் நிர்மலா சீதாராமனை குற்றம்சாட்ட முடியாது என்றும் சூழல் குறித்தும் சிந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 

Leave a Reply