முதல்வரை பார்க்க அப்பல்லோ மருத்துவமனை சென்ற குஷ்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் விரைவில் குணமாக அரசியல் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வரும் தீபாவளி தினத்திற்குள் முதல்வர் டிஸ்சார்ஜ் ஆக வேண்டும் என தமிழக மக்கள் பிரார்த்தனை செய்து வரும் நிலையில் இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு பிரபல நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு சென்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, ‘வரும் தீபாவளி தினத்திற்குள் முதல்வர் வீடு திரும்பி மக்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன். மேலும் முதல்வரின் உடல்நிலை குறித்து அமைச்சர்களிடம் கேட்டறிந்தேன். அவர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறினார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.