மதுரை மாவட்டம் குருவித்துறை குருபகவான் கோயிலில் ஜூலை 5ல் நடக்கும் குருபெயர்ச்சியை முன்னிட்டு ஜூலை 3 முதல் அனைத்து ராசிக்காரர்களுக்கு பரிகார பூஜையாக லட்சார்ச்சனை துவங்குகிறது. இங்குள்ள சித்திர ரத வல்லபபெருமாள் கோயில் முன் சுயம்புவாக குருபகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு ஜூலை 5 இரவு கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு குருபகவான் இடபெயர்ச்சியாகிறார். இதைமுன்னிட்டு அனைத்து ராசிக்காரர்களுக்கும் பரிகார பூஜையாக ஜூலை 3ல் காலை 10 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கி,ஜூலை 5 இரவு 10 மணிக்கு முடிகிறது. பங்குபெறுவோர் ரூ.300 செலுத்தினால் குருபகவான், சக்கரத்தாழ்வார் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலருடன் பிரசாத பை வழங்கப்படும். ரூ.100 செலுத்துபவர்களுக்கு பிரசாத பை வழங்கப்படும். சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோயில், தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் மூலநாதர் சுவாமி கோயில், திருமோகூர் காளமேகப்பெருமாள் கோயில், ஒத்தக்கடை நரசிங்கப்பெருமாள் கோயில்களில் லட்சார்ச்சனை டிக்கெட் கிடைக்கும். ஏற்பாடுகளை தக்கார் ஞானசேகரன், கோயில் நிர்வாக அதிகாரி விஸ்வநாத், ஊழியர் வெங்கடேசன் செய்துள்ளனர். தொடர்புக்கு 97903 55234.
Leave a Reply
You must be logged in to post a comment.