குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது
தேனி மாவட்டம் குரங்கணி பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத்தீயில் டிரெக்கிங் சென்ற 36 பேர் சிக்கி கொண்ட நிலையில் சம்பவ நாளிலேயே 11 பேர் உடல்கருகி பலியாகினர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஒவ்வொருவராக மரணம் அடைந்து நேற்று முன் தினம் வரை இந்த விபத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 16ஆக இருந்தது
இந்த நிலையில் நேற்று மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டை சேர்ந்த 29 வயது சதீஷ் குமார் என்பவர் சிகிச்சையின் பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதன் மூலம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.
மரணம் அடைந்த சதீஷ்குமார் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருடைய தந்தை ராமசாமி தனியார் பள்ளிக்கூட வேன் ஒன்றில் ஓட்டுனராக உள்ளார். சதீஷ்குமார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சதீஷ்குமார் மரணம் அடைந்ததை அடுத்து அவரது உறவினர்கள் கதறியழுத காட்சி கல்நெஞ்சையும் கரைய வைக்கும் வகையில் இருந்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.