shadow

கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பது யார்? எடியூரப்பா, குமாரசாமி கவர்னருடன் சந்திப்பு

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் தொகுதிகள் கிடைக்கவில்லை. இதனால் 104 தொகுதிகளில் வென்ற பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.

அதேபோல் காங்கிரஸ் மற்றும் மஜத ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து 117 தொகுதிகளில் வென்றுள்ளதால் தங்கள் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கவர்னரிடம் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் குமாரசாமி மற்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தற்போது கவர்னர் வாஜுபாய் வாலாவை சந்தித்தனர். அப்போது, ஆட்சியமைக்க தேவையான போதுமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதால், தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு ஏதுவாக, மஜத மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஒருவேளை எடியூரப்பாவை கவர்னர் ஆட்சியமைக்க அழைத்து, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டால், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்பதால் காங்கிரஸ் மைசூர் சாலையில் உள்ள சொகுசு விடுதியில் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Leave a Reply