shadow

டி.என்.பி.எல் கிரிக்கெட்: கோவை அணியிடம் படுதோல்வி அடைந்த திருச்சி

டந்த சில நாட்களாக டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகளின் லீக் ஆட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று கோவை லைக்கா அணியும் ரூபி திருச்சி அணியும் மோதியது.

திண்டுக்கல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் திருச்சி அணி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.

126 என்ற எளிய இலக்கை விரட்டிய கோவை லைக்கா அணி எந்தவித சிரமும் இன்றி 13,4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 125 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது., கேப்டன் முகுந்த 42 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் ஷாருக்கான் 67 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதினை தட்டி சென்றார்.

இந்த தோல்வி மூலம் திருச்சி முதல் தோல்வியை எதிர்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply