தென்கொரியா தலைநகர் சியோல் நகரத்தில் கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி பேட்மிண்டன் வீரர்கள் பங்குபெற்று விளையாடி வருகின்றனர்.
நேற்று நடந்த ஒரு போட்டியில் இந்தியாவின் ஜுவாலா கட்டா – அஸ்வினி பொன்னப்பா ஜோடி, கொரியாவின் யி நா ஜங்- ஸா யங் கிம் ஜோடியுடன் மோதியது. மிகவும் விறுவிறுப்பாக 40 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் இந்திய ஜோடி 18-21, 12-21 என்ற நேர் செட்டுகளில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. வெற்றி பெற்ற கொரிய நாட்டு ஜோடி தரவரிசையில் 3வது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கலப்பு இரட்டையர் பிரிவிலும் அஸ்வினி, தருண் கோனா ஜோடி தோல்வியடைந்துள்ளது. ஒற்றையர் பிரிவிலும் இந்திய வீரர்கள் அனைவரும் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தனர். எனவே கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இருந்து ஒட்டுமொத்தமாக இந்திய அணி வெளியேற்றப்பட்டுள்ளது. இது பேட்மிண்டன் ரசிகர்களை வெறுப்படைய வைத்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.