கார்த்தி நடித்த கொம்பன்’ திரைப்படத்திற்கு யூ’ சென்சார் சர்டிபிகேட் கிடைத்துவிட்ட நிலையில் இந்த படத்தை வரும் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸ் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்சார் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ‘கொம்பன் படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் பெருமைப்படுத்துவதாக உள்ளது என்றும் அதனால் இந்த படத்தை ரிவைசிங் கமிட்டியினர் பார்த்த பின்னர் ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளதாக டுவிட்டரில் செய்திகள் வெளிவந்துள்ளது.
கொம்பன் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் திடீரென ஏற்பட்டுள்ள பிரச்சனையால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி இந்த படம் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா? என்பது குறித்து கார்த்தி ரசிகர்கள் டுவிட்டரில் தங்கள் கவலையை தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.