shadow

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: முடிவுக்கு வருகிறது திரையுலகினர்களின் வேலைநிறுத்தம்

கடந்த ஒன்றரை மாதங்களாக கோலிவுட் திரையுலகினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தி வரும் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து நேற்று தமிழக அரசுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் பல சுமூகமான முடிவுகள் ஏற்பட்டுள்ளதால் விரைவில் திரையுலகின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று காலை, மாலை என இரு கட்டமாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “சினிமாத்துறை முழுக்க வெளிப்படைத்தன்மைக்கு வருகிறது. எனவே, இனிமேல் எல்லா திரையரங்குகளிலும் டிக்கெட் விற்பனை கணினி மூலமாகவே நடைபெறும். மேலும், ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போது எக்ஸ்ட்ராவாக வசூலிக்கப்படும் கட்டணம் இனிமேல் வசூலிக்கப்பட மாட்டாது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்ய தயாரிப்பாளர் சங்கமே முடிவெடுத்துள்ளது.

திரையரங்குகளுக்கு வரும் மக்களுக்கு எளிதாக இருக்கும் வகையில், படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்படும்” என்று கூறினார். மேலும்வேலை நிறுத்தம் குறித்து நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் விஷால் தெரிவித்ததால் வரும் வெள்ளி அன்று திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply