பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் ராணுவப்பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் புகுந்து அங்கிருந்த மாணவர்களை சரமாரியாக காட்டுமிராண்டித்தனமான சுட்டு தாக்கிய சம்பவம் உலக நாடுகளை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 141 அப்பாவி மாணவர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு கோலிவுட் நட்சத்திரங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் டுவிட்டரில் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு உடனடியாக தீவிரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் ஒன்றுசேர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக குஷ்பு, ராதிகா சரத்குமார், விக்ரம் பிரபு, எஸ்.பி.பி. சரண், சமந்தா, ப்ரியாமணி, ஜெயம் ரவி, பூஜா குமார், சின்மயி மற்றும் பலர் பாகிஸ்தானில் நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.