shadow

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: கொல்கத்தாவிடம் வீழ்ந்தது பஞ்சாப்

cricketஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியை கொல்கத்தா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி நேற்று கொல்கத்தாவை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. இதனையடுத்து முதலில் களத்தில் இறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. உத்தப்பா 70 ரன்களும், காம்பீர் 54 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அந்த அணியின் மாக்ஸ்வெல் 68 ரன்கள் எடுத்தார்.

இந்த போட்டியில் நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றிய ரூசல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இன்று டெல்லி மற்றும் புனே அணிகள் மோதுகின்றன.

Leave a Reply