5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் சென்னை தோல்வி: கொல்கத்தா அபாரம்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதிய நிலையில் சென்னை அணியை கொல்கத்தா 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இன்றைய போட்டியில் டாஸ் தோல்வி அடைந்ததால் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 177 ரன்கள் அடித்தது. தோனி 43 ரன்களும், வாட்சன் 36 ரன்களும், ரெய்னா 31 ரன்களும் அடித்தனர்.
178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி லின், நரேன், உத்தப்பா ஆகயோர்களின் விக்கெட்டுக்களை 4 ஓவர்களில் இழந்தாலும் கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் கில் ஆகியோர் பொறுப்பாக விளையாடி வெற்றிக்கு வித்திட்டனர். கொல்கத்தா அணி 17.4 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து 5விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளை பெற்று 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.