shadow

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பையுடன் மோதுகிறது கொல்கத்தா

புனே அணியுடன் இறுதி போட்டிக்கு செல்லும் அணி யார் என்பதை தீர்மானிக்கும் நாளைய முக்கிய போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன

நேற்றைய இரண்டாவது பிளே ஆப் போட்டியில் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 129 ரன்கள் எடுத்தாலே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடலாம் என்ற எளிய நிலை கொல்கத்தாவுக்கு ஏற்பட்டது.

ஆனால் திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. இதன்பின்னர் மழை நின்ற பின்னர் கொல்கத்தா அணி 6 ஓவர்களில் 48 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு டக்வொர்த் லீவீஸ் முறைப்படி அளிக்கப்பட்டது. இந்த 48 ரன்களை கொல்கத்தா 5.2 ஓவர்களில் அடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதனால் நாளை பெங்களூரில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு முந்தைய போட்டியில் கொல்கத்தா, மும்பையுடன் மோதுகிறது.

Leave a Reply