shadow

இன்னும் ஒரு வருடத்தில் புதுவையை விட்டு சென்றுவிடுவேன். கிரண்பேடி

புதுவை யூனியன் பிரதேசத்தில் முதல்வர் நாராயணசாமிக்கும், துணைநிலை ஆளுனர் கிரண்பேடிக்கும் இடையே அவ்வபோது பனிப்போர் நடந்து வரும் நிலையில் இன்னும் ஒரு வருடத்தில் தான் புதுவையை விட்டு சென்றுவிட முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார்

நேற்று புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் குடிமைப் பணிகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை செயலர்கள், துணை செயலர்கள், இயக்குநர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய கிரண்பேடி கூறியதாவது:

நான் இன்னும் ஒரு வருடம் மட்டுமே புதுச்சேரியில் இருப்பேன். அதிகாரிகள் என்னையும், எனது அனுபவங்களையும் முழுமையாக பயன்படுத்துங்கள். நான் உங்களை முன்னேற்றச் செய்வேன், அங்கீகரிக்கச் செய்வேன், சில அதிகாரிகள் தங்கள் பணிகளை சரியாக செய்வதில்லை.

நான் எனது வாழ்வில் பொய்களை கூறியது இல்லை. தங்களை முன்னேற்ற எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். 13 மாதங்களில் என்னை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வில்லை என்றால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன். நான் இருக்கும் இந்த ஒரு வருடத்திற்குள் வளமான புதுச்சேரியை உருவாக்க அதிகாரிகள் எனக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசியல்வாதிகள் அரசியலைப் பார்க்கட்டும், நிர்வாகிகள் நிர்வாகத்தை திறம்பட செயலாற்றட்டும். புதுச்சேரி சிறந்த யூனியன் பிரதேசமாக உருவாக வேண்டும் அதுவே தனது கனவு’ என்று உருக்கமாக கூறினார்.

Leave a Reply