ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜகவின் முதல்வர் வேட்பாளருடன் பொது இடத்தில் விவாத நடத்த வருமாறு நேற்று சவால் விடுத்தார். அதற்கு இன்று பதிலடி கொடுத்துள்ள கிரண்பேடி, ‘நான் மக்களுக்கு உண்மையாகவே சேவை செய்ய விரும்புகிறேன். அரவிந்த் கெஜ்ரிவாலுடன் வெட்டிப்பேச்சு நடத்தி பொழுதை கழிக்க விரும்பவில்லை’ என்று கூறியுள்ளார்.
மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பொதுவிவாதம் நடத்த தான் தயார் என்றும், ஆனால் அந்த விவாதத்தை பொது மேடையில் நடத்தி நேரத்தை வீணாக்காமல் சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமாக விவாதம் நடத்தலாம் என்றும் அவர் கூறியுளார்.
நான் லட்சியங்களை எட்டுவதையும், திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதையும், எதிர்கால நலன்களையும், சேவை செய்வதையுமே நம்புகிறேன், ஆனால் கெஜ்ரிவால் விவாதத்தையே நம்புகிறார் என்றும் கிரண் பேடி குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.