shadow

04_04_14_08_35_22_AMShirdi-Sai-Baba

மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டத்திலுள்ள ஷீரடியில் வாழ்ந்த மகான் சாய்பாபா. இவர் தங்கியிருந்த மசூதி துவாரகாமாயி என அழைக்கப்படுகிறது. அவர் பயன்படுத்திய பல பொருட்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள துனி என்னும் நெருப்புக் குண்டத்தில் கிடைக்கும் சாம்பல் உதி என்னும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பாபாவின் அவதார தினமாகக் கருதப்படும் ராமநவமியும், சமாதி அடைந்த தினமான விஜயதசமியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உலகிற்கு நல்வழி காட்டிய குருநாதரான இவருக்கு குரு பூர்ணிமா விழா மூன்று நாள் கொண்டாடப்படுகிறது. குரு வாரமான வியாழனன்று, இவரை வழிபடுவோருக்கு கேட்ட வரம் அனைத்தும் கிடைக்கும்.

Leave a Reply