கேரளா பெண்ணின் மர்ம தகவல்
கேரளாவில் பத்தனம்திட்டா என்ற பகுதியில் உள்ள பெண் ஒருவருக்கு 36 நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு இருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு பல முறை கொரோனா சோதனை செய்யப்பட்ட போதிலும் நெகட்டிவ் வரவில்லை என்பதால் டாக்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்
முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவித்த போது கொரோனா வைரஸ் எப்படி தீவிரம் அடைகிறது என்பதை கணிக்கவே முடியவில்லை என்று கூறியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை நடத்திய போதிலும் நெகட்டிவ் ரிசல்ட் வரவில்லை என்றும் இருப்பினும் அந்த பெண் தற்போது நலமுடன் இருப்பதாகவும் கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்
அந்தப் பெண்ணுக்கு கொரோனா எப்படி பரவியது? ஏன் கொரோனாவில் இருந்து அவரால் குணமாக்க முடியவில்லை என்று மருத்துவர்கள் தீவிர ஆய்வு செய்து வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.