shadow

சிவசேனாவை எதிர்த்து கிஸ் போராட்டம். கேரள மாணவிகள் ஏற்படுத்திய பரபரப்பு

ஒவ்வொரு வருடமும் காதலர் தின கொண்டாட்டத்தின்போது காதலர்களுக்கு சிவசேனா அமைப்பினர் தொல்லை கொடுத்து வருவதாக கூறப்படும் நிலையில் இந்த வருட காதலர் தினத்திலும் சிவசேனா அமைப்பினர் கேரளாவில் உள்ள மரைன் டிரைவ் பகுதியில் உள்ள பூங்காவில் காதல் ஜோடிகளை அடித்து அங்கிருந்து விரட்டினர்.

இந்த சம்பவத்திற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்து வந்த மாணவ மாணவிகள் நேற்று திடீரென சிவசேனாவுக்கு எதிராக கோஷமிட்டு ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் கிஸ் அடித்து கொள்ளும் போராட்டத்தை செய்தனர்.

பொது இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் கிஸ் ஆப் லவ்’ என்’ற இந்தப் போராட்டத்தின்போது ஆண்களும் பெண்களும் ஒருவொருக்கொருவர் முத்தங்களை பறிமாறிக் கொண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply