shadow

விவாகரத்து ஆகவிருக்கும் தம்பதியின் குழந்தைக்கு பெயர் வைத்த நீதிபதி

கேரளாவில் விவாகரத்து ஆகவிருக்கும்தம்பதிகளுக்கு பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பதில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு கோர்ட் வரைக்கும் வந்ததால், இருவரையும் சமாதானப்படுத்தி, இருவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நீதிபதியே ஒரு பெயர் வைத்த ருசிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

விவாகரத்து ஆன கிறிஸ்தவ பெண்ணுக்கும், இந்து ஆணுக்கும் பிறந்த 2-வது குழந்தைக்கு பெயர் சூட்டும் குறித்து ஏற்பட்ட பிரச்சனையால் கணவன்-மனைவி இருவரும் கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அவர்களுடை விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்நிலையில், அந்த குழந்தை, தற்போது தாயின் பராமரிப்பில் இருக்கிறது.

குழந்தைக்கு ‘ஜோகன் மணி சச்சின்’ என்று ஞானஸ்நானம் செய்யப்பட்டு இருப்பதால், அதே பெயரையே சூட்ட வேண்டும் என்று தாயார் தரப்பும், குழந்தை பிறந்த 28-வது நாளில், இந்து முறைப்படி சூட்டப்பட்ட ‘அபிநவ் சச்சின்’ என்ற பெயரே இருக்க வேண்டும் என்று தந்தையார் தரப்பும் வாதம் செய்தனர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார், இருதரப்பையும் சமாதானப்படுத்தும் வகையில், குழந்தைக்கு ‘ஜோகன் சச்சின்’ என்று தானே பெயர் சூட்டினார். தாயாரை திருப்திப்படுத்த ‘ஜோகன்’ என்ற பெயரையும், தந்தையை திருப்திப்படுத்த ‘சச்சின்’ என்ற பெயரையும் எடுத்துக்கொண்டதாக அவர் கூறினார்.

குழந்தையை பள்ளியில் சேர்க்க பிறப்பு சான்றிதழ் அவசியம் என்பதால், 2 வாரங்களுக்குள் இந்த பெயரில் பிறப்பு சான்றிதழ் வழங்குமாறு நகராட்சி பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply