டாக்டர் பரிந்துரை செய்பவர்களுக்கு மட்டும் மது வழங்கப்படும்: முதல்வர் அதிரடி

மதுகுடிக்க முடியாமல் தற்கொலை செய்வதைத் தடுக்க கேரளா அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

இதன்படி டாக்டர்கள் பரிந்துரை சீட்டுடன் வருபவர்களுக்கு மதுபானம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மதுகுடிக்க முடியாமல் 7 பேர் கேரளாவில் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து கேரள அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply