shadow

சீட் பெல்ட் அணிந்ததால் உயிர் பிழைத்தேன். விபத்தில் தப்பிய கேரள முதல்வர் பேட்டி
umman
கேரள முதல்வர் உம்மன்சாண்டி ஜனாதிபதி விழாவில் கலந்து கொண்ட பின்னர் வீடுதிரும்பி கொண்டிருந்தபோது அவர் சென்ற கார் திடீரென பஞ்சராகி டிரைவரின் கட்டுப்பட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கேரள முதல்வர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு என்ற பகுதியில் ஜனாதிபதி பிணாப் முகர்ஜி கலந்துக் கொண்ட விழாவில் கேரள முதல்வர் உம்மன்சாண்டியும் பங்கேற்றார். இந்த விழா முடிந்த. பின்னர் இரவு தன்னுடைய காரில் புதுப்பள்ளியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென அவர் சென்ற கார் எதிர்பாராதவிதமாக டயர் பஞ்சரானதால் டிரைவரின் கட்டுப்பட்டை இழந்து சாலையில் இருந்து வழுக்கிச் சென்றது. பின்னர் அந்த கார் சாலையோரத்தில் இருந்த சிறிய வாய்க்காலில் விழுந்தது.

உடனடியாக முதல்வருடன் சென்ற பாதுகாப்பு படையினர் காரில் இருந்து உம்மன்சாண்டியை காப்பாற்றினர். இந்த விபத்தில் அவர் சிறுகாயமும் இன்றி உயிர் தப்பினார். கார் சீட் அணிந்திருந்ததால் தனக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று முதல்வர் தெரிவித்தார். முதல்வர் காயமின்றி தப்பித்தாலும், அவருடைய பாதுகாவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply