shadow

kaththiஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்த ‘கத்தி’ திரைப்படத்திற்கு திடீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், கத்தி திரைப்படத்தை வெளியிடும் தியேட்டர்களுக்கு மறைமுக உத்தரவு வெளிவந்துள்ளதாகவும் இன்று காலையில் இருந்தே ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர்களில் செய்தி வெளியாகிக்கொண்டு வருகிறது.

சமீபத்தில் விஜய் ரசிகர்கள் ஒரு முக்கிய சம்பவத்திற்கு இனிப்பு கொடுத்த்தால் ஏற்பட்ட கோபம் காரணமாகவே மேலிடத்தில் இருந்து இந்த மறைமுக உத்தரவு வந்திருப்பதாகவும், இதனால் கத்தி வெளியாகும் தியேட்டர்களில் பூஜை திரைப்படத்தை வெளியிட ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த திடீர் சிக்கல் காரணமாக விஜய், முருகதாஸ், லைகா நிறுவனத்தினர் ஆகியோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை சாதாரணமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று முதல் கத்தி படத்திற்கு எதிராக முழு வீச்சில் செயல்பட இருப்பதால் அவருக்கு பின்னணியில் பெரும் கை யாராவது இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் லைகா நிறுவனம் ‘ஒருவேளை கத்திக்கு தமிழகத்தில் ஏதாவது பிரச்சனை வந்தால், தமிழகதை தவிர வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.. விஸ்வரூபம் திரைப்படம் இதுமாதிரிதான் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கத்திக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கண்டிப்பாக திட்டமிட்டபடி வெளியாகும் என்று கத்தி தரப்பில் இருந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் மூன்று நாளில் உண்மை என்னவென்று தெரிந்துவிடும். அதுவரை விஜய் ரசிகர்கள் போலவே நாமும் பொறுமை காப்போம்.

Leave a Reply