shadow

kaththiவிஜய்,சமந்தா நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்த கத்தி படத்திற்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. சமீபத்தில் சென்னை வந்த கத்தி படத்தின் தயாரிப்பாளர், கத்தி படத்தின் சாட்டிலைட் உரிமையை ஆளுங்கட்சி ஆதரவு தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்துவிட்டதால், கத்தி படத்தை எதிர்த்த தமிழ் அமைப்புகள் அனைத்தும் திடீரென அமைதியானதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் இருப்பதால், அமைதியாக இருந்த தமிழ் அமைப்புகள் மீண்டும் வீறுகொண்டு எழுந்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ரகசிய ஆலோசனை நடத்திய தமிழ் அமைப்புகளின் பிரமுகர்கள் மீண்டும் கத்தி படத்திற்கு எதிரான போராட்டங்களை புது உத்வேகத்துடன் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாக கோலிவுட்டில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் இந்த முறை பெரிய இடம் ஒன்றில் இருந்து போராட்டத்திற்கு க்ரீன் சிக்னல் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வெளியான தினத்தில் விஜய் ரசிகர்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடியதே இந்த க்ரீன் சிக்னலுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனால் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தயாரிப்பு தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எந்தவித சிக்கலும் இன்றி தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்த்த கத்திக்கு திடீர் சிக்கல் வந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் தங்கள் கோபத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply