shadow

பிரசாதத்துடன் முதல்வரை பார்க்க வந்த காசி பூசாரி

kasiகடந்த ஒரு மாத காலமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க டெல்லி தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை தினமும் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று காசியிலிருந்து பூசாரி ஒருவர் அப்பல்லோ மருத்துவனைக்கு வந்தார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து கேள்விப்பட்டு தான் வந்துள்ளதாகவும், முதல்வரை தான் பார்க்க வேண்டும் என்று கூறியதாகவும் ஆனால் அவரை உள்ளே விட பாதுகாப்பு போலீசார் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளது

ஆனால் அவரும் முதல்வரை பார்க்காமல் போகமாட்டேன் எனக்கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் தன்னை பற்றிய விபரங்களை சொல்லி அனுப்பினார். தான் காசி விஸ்வநாதர் கோவில் பிரதான பூசாரி என்றும் தனது பெயர் ஓமாச்சாரி என்று கூறி பிரசாதத்துடன் வந்திருப்பதாக கூறி தகவல் சொல்லி அனுப்பிய பின்னரே அவருக்கு அனுமதி கிடைத்தது.

சற்று நேரத்தில் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி கருப்புச்சாமி நேரில் வந்து பவ்யமாய் அழைத்து சென்றதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply