shadow

 

Untitled-1திருச்சி பாராளூமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அன்பழகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வரும் கே.என்.நேரு, கருணாநிதி கை காட்டுபவர்தான் நிச்சயம் அடுத்த பிரதமராக வருவார் என்று கூறினார்.

rahul-gandhi_9திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. திமுக சார்பில் அன்பழகனும், அதிமுக சார்பில் குமாரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். திமுக வேட்பாளர் அன்பழகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, வருகிற பாராளுமன்ற தேர்தலில் கருணாநிதி கைகாட்டுபவர்தான் பிரதமர். திமுகவின் பங்கு இல்லாமல் யாரும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என பேசினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும்படி பேசியுள்ள அதிமுக வேட்பாளர் குமார், திருச்சி தொகுதி அம்மாவின் கோட்டை என்று கூறியதோடு, நாடு முழுவதும் மூன்றாவது அணியின் அலை வீசுவதாகவும், மூன்றாவது அணியின் தலைவராக அம்மா தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் இந்திய பிரதமராகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் கூறினார்.

இதனிடையே திருச்சியின் தேமுதிக வேட்பாளர் விஜய்குமாரும், தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இந்தியாவின் அடுத்த பிரதமர் மோடிதான் என்றும், மோடியை பார்த்து அமெரிக்காவே பயந்து நடுங்குகிறது என்றும் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் காங்கிரஸுக்கு 5 தொகுதிகள் வரை கொடுத்து திமுக கூட்டணியில் காங்கிரஸில் இணைத்துக்கொள்ள கருணாநிதி ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதுகுறித்து ராகுல்காந்தியிடம் குலாம்நபி ஆசாத் பேசி வருவதாகவும் டெல்லியில் கூறப்பட்டு வருகிறது.

Leave a Reply