shadow

karunanidhi
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து வெளியே வந்து, மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரலாம் என ஜெயலலிதா நினைத்தால், அது வெறும் கனவாகவே அமையும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு தண்டனை தீர்ப்பு வந்த 13 நாட்களுக்கு பின்னர் முதல்முறையாக இதுகுறித்து கருணாநிதி கருத்து கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று சென்னையில் நடைபெற்ற திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், “ஜெயலலிதாவின் கனவு பலிக்காது என்ற நிலை உருவாவதற்கு, மாவட்டச் செயலாளர் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்றும் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

வழக்கில் மேல்முறையீடு செய்து ஜெயலலிதா வெற்றி பெறுவது கேள்விக்குறி என்றும் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்த கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் அக்கட்சியினர் வன்முறை நிகழ்த்துவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply