இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் என்று புகழ்பெற்ற சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை புத்தகம் சமீபத்தில் பரபரப்புடன் வெளிவந்தது. இந்த புத்தகத்தை மிகவும் ஆர்வத்துடன் திமுக தலைவர் கருணாநிதி படித்து வருகிறார். இந்த புத்தகம் குறித்து கருணாநிதி கூறியபோது, சச்சினின் புகழுக்கு அவருடைய அமைதியும் அடக்கமுமே காரணம் என கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், அண்மையில் எழுதி வெளியிட்ட, அவரது சுயசரிதை நூலான “‘பிளேயிங் இட் மை வே” கிடைக்கப்பெற்றேன்.
கிரிக்கெட்டில் சாதனைகள் பல புரிந்த போதும் அமைதியின் உருவமாய், ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி அடக்கத்துடன் அவர் பதிலளிக்கும் பாங்கும் அந்தப் பண்பாடும்கூட, அவர் பெரும் புகழ்பெறக் காரணங்களாக அமைந்தன என்றால், அது மிகையல்ல.
எந்நாளிலும் எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சச்சினின் – சுயசரிதை நூலை ஆர்வத்துடன் படித்து வருகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
சச்சினின் சுயசரிதை நூலை ஆர்வத்துடன் படிக்கும் புகைப்படத்தை கருணாநிதி தனது ஃபேஸ்புக் தளத்திலும் வெளியிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.