shadow

ஜெயலலிதா போல் கருணாநிதிக்கும் டிரையோஸ்டோமி கருவி. திமுக தொண்டர்கள் கவலை

திமுக தலைவர் கருணாநிதி நேற்றிரவு சளித் தொற்று மற்றும் நுரையீரல் செயல்பாட்டில் பாதிப்பு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கருணாநிதிக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக அவருக்கு டிரையோஸ்டோமி கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும் காவேரி மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற போது இதே போன்று டிரையோஸ்டோமி கருவி பொருத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவருடைய உடல்நலம் இயல்பாக உள்ளதென்றும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply