shadow

karunanidhiதமிழக அரசின் விருப்பத்திற்கேற்ப மாநில தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக தேர்தல் தேதியை அறிவித்துள்ளது என குற்றம் சாட்டியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை திமுக புறக்கணிக்கும் என்று அறிவித்துள்ளார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 28ஆம் தேதியே வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி தொடங்கிவிட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது வியப்பை அளிப்பதாக கூறிய கருணாநிதி, வேட்பு மனுதாக்கல் செய்யும் அடுத்த நாளில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை தினங்களாக இருக்கின்றது என்றும் இதனால் எதிர்க்கட்சி கள் வேட்பாளர்களை தேர்வு செய்ய போதுமான அசகாசம் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு கடைசி நேரம் வரை மாநகராட்சிகளுக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாகவும்,  அதிமுக வேட்பாளர்களை ஏற்கனவே தயார் செய்து வைத்துக்கொண்டு, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள கருணாநிதி, தமிழக அரசின் விருப்பத்துக்கு ஏற்ப மாநில தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்

Leave a Reply