‘பொது நலன் கருதி’யதால் ஹீரோவான காமெடி நடிகர்
கோலிவுட் திரையுலகில் கவுண்டமணி, விவேக், முதல் சந்தானம் வரையிலான காமெடி நடிகர்கள் அவ்வப்போது ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவராகிய கருணாகரனும் தற்போது ஹீரோவாகியுள்ளார். கருணாகரன் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு ‘பொது நலன் கருதி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
3 கிராமத்து இளைஞர்கள் சென்னைக்கு வேலை தேடி வந்து வேலை கிடைக்காத காரணத்தினால் பொது சேவை செய்ய முடிவு செய்கின்றனர். அதில் அவர்களுக்கு வருமானம் கிடைத்தாலும் சில பிரச்சனைகள் வருகின்றது. இந்த பிரச்சனைகலை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதையாம்
3 கிராமத்து இளைஞர்களாக கருணாகரன், ஆதித் மற்றும் சந்தோஷ் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் அனு சித்தாரா, லீஷா ஆகிய இருவர் நாயகிகளாக நடிக்கவுள்ளனர். அறிமுக இயக்குனர் ஜியான் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் தொடங்கியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.