கருணாநிதிக்கு திடீர் ரத்த அழுத்தம்: காவேரி மருத்துவமனையில் அனுமதி
திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட நிலையில் அவரது உடல்நிலை குறித்த அறிய அவரது வீட்டிற்கு அரசியல் தலைவர்களும் திமுக தொண்டர்களும் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சற்றுமுன்னர் கருணாநிதி அவர்களுக்கு திடீர் ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ரத்த அழுத்த குறைவிற்கு 20 நிமிடங்கள் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் கருணாநிதி நலமுடன் இருப்பதாகவும், திமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் அலர்ட் ஆக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.