காவிரி வழக்கில் இருந்து வெளியேற ஃபாலி எஸ்.நாரிமன் முடிவு. கர்நாடகா அதிர்ச்சி
கர்நாடக அரசின் சட்ட ஆலோசகராகவும், வழக்கறிஞராகவும் உள்ள மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் காவிரி வழக்கில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாகவும், இனிமேல் இந்த வழக்கில் ஆஜராக முடியாது என்று அவர் தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவை கர்நாடக அரசு மதிக்காதது அவருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதன் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் கர்நாடக அரசு உயரதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.\
முன்னதாக சமீபகாலமாக காவிரி வழக்கில் நாரிமன் வாதம் எடுபடவில்லை என்றும் கர்நாடகாவுக்கு எதிரான உத்தரவுகள் வெளியானதால், அவரை கண்டித்து அம்மாநிலத்தில் கன்னட அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். இதனால் நாரிமன் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் நாரிமன் தனது முடிவை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்திருப்பதாகவும், கர்நாடக அரசின் சட்ட ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் தெரியவந்துள்ளது .
Leave a Reply
You must be logged in to post a comment.