இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பெங்களூரு திரும்பிய எம்.எல்.ஏக்கள்
கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து இன்று காலை 11 மணிக்கு சட்டமன்றம் கூடவிருக்கின்றது.
இந்த சட்டமன்றத்தில் கூடுவதற்காக ஆங்காங்கே சொகுசு ரிசார்ட்டுகளில் தங்கியிருந்த வெற்றி பெற்ற அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் சற்றுமுன்னர் பெங்களூர் வந்தடைந்தனர்.
இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் 104 எம்.எல்.ஏக்களை மட்டுமே வைத்துள்ள பாஜக, ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது இழக்குமா? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. மாற்று கட்சியினர் ஆதரவு கொடுத்தால் மட்டுமே ஆட்சி தப்பிக்கும் என்ற நிலையில் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.