ஜல்லிக்கட்டை அடுத்து எருது ஓட்டத்திற்கும் தடை. என்ன நடக்குது இந்த நாட்டில்?
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுவுக்கு தடை விதித்ததால் தமிழக மக்கள் அனைவருமே கடும் கோபத்தில் உள்ள நிலையில் பாரம்பரியமாக எருது ஓட்டத்தை நடத்தி வந்த கர்நாடகாவிலும் அம்மாநில ஐகோர்ட் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜல்லிகட்டு தடை குறித்த வழக்கு போட்டி பீட்டா என்ற அமைப்புதான் எருது ஓட்டத்திற்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த கர்நாடக ஐகோர்டி எருது ஓட்டத்திற்கு தடை விதித்தது.
எனவே வரும் 26ஆம் தேதி கர்நாடகாவில் நடைபெறவிருந்த அனைத்து எருது ஓட்ட விளையாட்டுக்களும் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.