shadow

களத்தில் இறங்குகிறார் கருணாநிதி. திமுக தொண்டர்கள் உற்சாகம்
karunanidhi
தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து திடீரென மக்களை சந்திக்கும் ‘நமக்கு நாமே’ சுற்றுப்பயணத்தை கடந்த சில நாட்களுக்கு முன் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். ஆனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பொதுமக்கள் ‘நமக்கு நாமே’ பயணத்தை மறந்துவிட்டனர்.

இதனால் அடுத்த முயற்சியாக மக்களை சந்திக்க திமுக தலைவர் கருணாநிதி கிளம்பவிருப்பதாக திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் கூறி வருகின்றனர். மேலும் கடந்த சில மாதங்களாக சோர்ந்து போயிருக்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்த தானே களமிறங்கினால், அது அவர்களை இன்னும் முடுக்கிவிடும் என்றும், அதனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மக்களை நேரில் சந்திக்க கருணாநிதி முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜெயலலிதா போல் மக்களை ஆகாயத்தில் இருந்து சந்திக்காமல் நேருக்கு நேர் சந்திக்க தலைவர் கிளம்புகிறார் என திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கருணாநிதியின் சுற்றுப்பயணத்தின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியும் வழங்கவுள்ளாராம். அவரது பயண முன்னேற்பாடுகளை கனிமொழி முன்னின்று செய்து வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply