shadow

p76தேவையானவை:

விழுதாக அரைக்க: நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகு – 2 டீஸ்பூன், தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், நல்ல கொழுந்து கறிவேப்பிலை – ஒரு கிண்ணம்.

குழம்புக்கு: நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 5, பூண்டுப் பல் – 4, புளி – எலுமிச்சம்பழ அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, அரைக்க வேண்டியதை எல்லாம் ஒவ்வொன்றாகப் போட்டு வறுக்கவும். ஆறிய பிறகு, சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும். அம்மியில் அரைத்தால், ஊரே மணக்கும். இருப்புச் சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, வெந்தயம், பெருங்காயம் பொரித்து, உரித்த வெங்காயம், பூண்டுப் பல் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்கவிட்டு, கெட்டியானதும் இறக்கவும். சுடச்சுட சாதத்தில் கெட்டிக் கறிவேப்பிலைக் குழம்பு விட்டு சாப்பிட, சுவை சுண்டியிழுக்கும்.  

மருத்துவப் பலன்கள்: ஜீரணத்தைத் தூண்டும். சிறுசிறு ரத்தக் குழாய்களுக்கும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

Leave a Reply