shadow

100பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு மோடியின் இந்துத்துவா தீவிரவாதமே காரணம் என பாகிஸ்தான் தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கராச்சி விமான நிலையத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் காரணமாக 24 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த ஜமாத் உத் தவா என்ற பெயரில் இயங்கும் பாகிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹஃபீஷ் சையத், கூறும்பொது இந்த தாக்குதல் முழுக்க முழுக்க இந்தியாவால் தொடுக்கப்பட்ட மறைமுகப் போர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புதிய பாதுகாப்பு குழுவினர் இந்த தாக்குதலுக்கு பின்னணியாக உள்ளனர். இனிமேலாவது பாகிஸ்தான், உண்மையான எதிரி யார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தை இன்னொரு பாகிஸ்தான் இயக்கமான ஜமாத் உத் தவா என்ற இயக்கமும் ஆதரித்துள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என தெஹ்ரீக் – இ – தாலிபான் என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply