கான்பூர் கிரிக்கெட் டெஸ்ட்: 318 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
நேற்று கான்பூர் மைதானத்தில் ஆரம்பமான இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி நேற்று 9 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் இன்று 318 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டம் இழந்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.