shadow

kumari

நாகர்கோவில் : முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்நடுவில் அமைந்துள்ள பகவதி அம்மன் திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா வரும் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 7.30-க்கு கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து விழாவில் தினமும் காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 12 மணிக்கு அன்னதானம், மாலை ஆறு மணிக்கு சமயமாநாடு, இரவு ஒன்பது மணிக்கு சுவாமி வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 31-ம் தேதி ஒன்பதாம் நாள் விழாவில் காலை 7.30-க்கு தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. பத்தாம் நாள் விழாவில் காலை 6.30-க்கு அம்மன் ஆராட்டுக்கு எழுந்தருளுகிறார்.

Leave a Reply